பதிவு செய்த நாள்
07 செப்2011
00:28
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய போது குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இந்நிலையில்,மதியத்திற்கு பிறகு, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதைத்தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், வங்கி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை,நேற்றும் குறைந்திருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 149.48 புள்ளிகள் அதிகரித்து, 16,862.81 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,894.73 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 16,488.30 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 47.10 புள்ளிகள் உயர்ந்து, 5,064.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,072.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,942.90புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|