ஐரோப்பிய சந்தைகளில் முன்னேற்றம்'சென்செக்ஸ்' 149 புள்ளிகள் உயர்வுஐரோப்பிய சந்தைகளில் முன்னேற்றம்'சென்செக்ஸ்' 149 புள்ளிகள் உயர்வு ... மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது சென்செக்ஸ் ...
ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
09:28

புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.இதுதொடர்பாக, ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே துறையில் எரிபொருள் செலவானது, அதன் மொத்தச் செலவில் 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தாததால், ரயில்வேயின் நிதி நிலைமையும் திருப்திகரமாக இல்லை. எனவே, ரயில் கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டுமென திட்ட கமிஷனும், ரயில்வே தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.'ரயில்வேயின் மொத்த வருவாயில் 30 சதவீதம், பயணிகள் கட்டணம் மூலம் வருகிறது. எனவே, இழப்புகளை சரிக்கட்டவும், ரயில்வேயின் வருவாயை மேம்படுத்தவும், ரயில்களில் அனைத்து வகுப்புகளின் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். அதன் மூலம், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட முடியும்' என, ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர் விவேக் சகாய் ஏற்கனவே யோசனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே தொடர்பான 2010 -11ம் ஆண்டுக்கான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை, கடந்த வெள்ளியன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பயணிகள் சேவை மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல், ரயில்வே துறை திணறி வருகிறது. 2008-09ல் பயணிகள் சேவை மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான இயக்கச் செலவில், 15 ஆயிரத்து 268 கோடி அளவுக்கு ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு முந்தைய ஆண்டில் இழப்பு, 7 ஆயிரத்து 493 கோடி ரூபாய். எனவே, ரயில்வேயின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டுமெனில், பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணங்களையும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே தொடர்பான பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்களும், 'ரயில்களில் பயணிகள் கட்டணத்தை குறிப்பிட்ட அளவுக்காவது உயர்த்த வேண்டும். இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, டீசல் விலை உயர்வால் ஏற்படும் இழப்பையும் சரிக்கட்ட முடியும். மேலும், ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் போது, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு, ரயில்வே முறைகளிலும் மேம்பாட்டைக் கொண்டுவர முடியும்' என தெரிவித்துள்ளனர். அதனால், ரயில்களில் உயர்வகுப்பு கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படலாம்.இவ்வாறு ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறினர். இருந்தாலும், இந்தத் தகவலை உறுதி செய்ய, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மறுத்து விட்டார். ''ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது யோசனை அளவில் தான் உள்ளது,'' என்றும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)