பதிவு செய்த நாள்
07 செப்2011
15:59
புதுடில்லி : கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான ஆசியா மோட்டார் ஒர்க்ஸ், நடப்பு ஆண்டில் தனது விற்பனையை 3 மடங்காக அதிகரிக்க டிசம்பர் 5 புதிய மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தனது ஏற்றுமதி வர்த்தகத்தை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் ஆசியா மோட்டார் ஒர்க்ஸ் முடிவு செய்துள்ளது. அடுத்த 4 மாதங்களில் தனது புதிய தயாரிப்புக்களை மெல்ல மெல்ல அறிமுக செய்ய உள்ளதாகவும், அடுத்த மாதத்தில் 16 டன் டிப்பரை முதல்கட்டமாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 25 டன் மற்றும் 49 டன் திறன் கொண்ட கனரக வாகன மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் தனது கனரக வாகன விற்பனையை 7000 லிருந்து 20 ஆயிரம் ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|