பதிவு செய்த நாள்
08 செப்2011
04:42
புதுடில்லி : வால்வோ பஸ்சஸ் இந்தியா நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், நடுத்தர வகை பஸ்களின் கட்டுமான திட்டத்திற்காக, 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் பஷி தெரிவித்தார். வால்வோ பஸ்சஸ் நிறுவனம், சொகுசு வகை பஸ்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நடுத்தர வகை பஸ்கள் தயாரிக்கும் வகையில், நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய சொகுசு வகை பஸ்கள் 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் என்ற விலையில் உள்ளன. தற்போது, இந்நிறுவனத்திற்கு, பெங்களூரில் பஸ் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ள உபரி நிலப் பகுதியில், நடுத்தர பஸ்கள் தயாரிப்பதற்கான தொழிற்பிரிவு தொடங்கப்பட உள்ளது. சென்ற ஆண்டு, இந்நிறுவனம் உள்நாட்டில் 560 பஸ்களை விற்பனை செய்துள்ளது. நடப்பாண்டில், இந்த எண்ணிக்கையை 800 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என, பஷி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|