பதிவு செய்த நாள்
10 செப்2011
00:26
சென்னை:மகிந்திரா நிறுவனம், அதி நவீன வடிவிலான புதிய பொலேரோ காரை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) விவேக் நாயர் கூறியதாவது: அதி நவீன முறையிலான வடிவமைப்பில், பொலிவான தோற்றத்தில் புதிய பொலேரோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வகை காரில், எம்.2.டீ.ஐ.சி.ஆர்., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மர பினிஷிங் கொண்ட மைய கன்சோல், கலைநயத்துடன் கூடிய உள் அலங்கார வடிவமைப்புகள், டிஜிட்டல் டிஸ்பிளே, குஷனுடன் கூடிய கூடுதல் இருக்கைகள் ஆகியவை, புதிய பொலேரோவில் இடம் பெற்றுள்ளன. இது தவிர, சீட் பெல்ட், எரிபொருள் நிரப்புதலை நினைவூட்டல், இன்ஜின் அளவுக்கு அதிகமாக சூடேறுவதை உணர்த்தவும், கதவுகள் சரியாக மூடப்படாவிட்டால், எச்சரிக்கை ஒலி எழுப்புவது என, புதிய வŒதிகள் இக்காரில் உள்ளன. இப்புதிய பொலேரோ கார், எரிபொருள் சிக்கனத்தை எடுத்துக்காட்டும் வகையில், லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது.எஸ்.எல்.இ.எஸ்.எல்.எக்ஸ்., மற்றும் இசட்.எல்.எக்ஸ்., உள்ளிட்ட மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்புதிய காரின் விலை, மாடல்களுக்கேற்ப, 6.38 லட்ச ரூபாய் முதல் 7.03 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. இவ்வாறு, விவேக் நாயர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|