பதிவு செய்த நாள்
10 செப்2011
00:29
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக் கிழமையன்று, மந்தமாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட, உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வியாபாரம் சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் நன்கு இல்லாமல் போனது. வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், உலோகம், வங்கி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. இருப்பினும், நுகர்பொருள்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 298.57 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,866.97 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,211.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,830.95 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. இப்பங்குச் சந்தையில், 1,190 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,660 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 104 நிறுவனப் பங்குகளின் விலையில், மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 93.80 புள்ளிகள் சரிவடைந்து, 5,059.45 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,163.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,046.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|