உலக பங்குச் சந்தைகளில் சரிவு நிலை'சென்செக்ஸ்' 299 புள்ளிகள் வீழ்ச்சிஉலக பங்குச் சந்தைகளில் சரிவு நிலை'சென்செக்ஸ்' 299 புள்ளிகள் வீழ்ச்சி ... மானிய விலையில் 86 லட்சம் வீடுகள் சீனா அதிரடி மானிய விலையில் 86 லட்சம் வீடுகள் சீனா அதிரடி ...
பொதுத்துறை ஊழியர்கள் தீபாவளி ஜவுளி வாங்க வங்கி கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2011
10:31

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்தில், தீபாவளி ஜவுளி வாங்குவதற்கு, வங்கிகள் மூலம், கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்தில், ஜவுளி கடன் பெறும் வசதி இருக்கிறது. இவர்கள் வாங்கும் ஜவுளிக்கான தொகை, தவணை முறையில், சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்படும்.அரசு ஊழியர்களின் ஜவுளிக் கடன், ஒரு மாதத்திற்குள் வந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாங்கிய ஜவுளிக் கடன் தொகை மாதா, மாதம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதில் தாமதம் காட்டுகின்றன. பல நிறுவனங்கள் ஜவுளி கடன் கட்டுவது குறித்து, கண்டுகொள்ளாமலும் இருக்கின்றன. எனவே, 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு, 17 கோடி ரூபாய் வரை கடன் பாக்கியுள்ளது. இதனால், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு வட்டி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தாண்டு, 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் ஜவுளி கடன் வழங்கப்படாது, என்றும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து, 'கோ-ஆப்டெக்ஸ்' மேலாண்மை இயக்குனர் உமா சங்கர் கூறியதாவது: 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஜவுளி கடன் ஒரு மாதத்தில் கட்டப்பட்டு விடுகிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல தவணைகளில் ஜவுளி கடனை செலுத்தலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல நிறுவனங்களிலிருந்து, சம்பள பிடித்தம் செய்து, ஜவுளி கடன் திருப்ப செலுத்தாததால், 17 கோடி ரூபாய் வரை கடன் பாக்கியுள்ளது. இக்கடன் தொகையை, படிப்படியாக வசூலித்து விடலாம் என்றாலும், 4 கோடி ரூபாய் வரை, வராக் கடனாகும் நிலையுள்ளது.எனவே, இவ்வாண்டு பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, நேரடியாக, 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் கடன் வழங்குவதை தவிர்த்து, அவர்களுக்கு வங்கிகள் மூலம், கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த ஏற்பாட்டில் வங்கியினருக்கு, 'கோ-ஆப்டெக்ஸ்' ஜவுளி நிலையங்களில், தனி கவுன்டர் வசதி செய்தி கொடுக்கப்படும். இக்கவுன்டரில் பணியாளர்கள், ஜவுளி கடன் அனுமதி பெற்று, தேவையான ஜவுளிகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வசதியில் பொதுமக்களும் உரிய ஆவணங்களுடன் வங்கியினரை அணுகி, கடன் பெற்று, ஜவுளி வாங்க வசதி செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு உமா சங்கர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)