பதிவு செய்த நாள்
10 செப்2011
16:03
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகத்தின் விதிமுறைகளை மீறியதால், விப்ரோ தகவல் தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், விஷாக் தகவல் தொடர்பு தொழிற்பேட்டையில் இருந்து, ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆந்திர பிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகத் தலைவர் எஸ்.சிவராம சுப்ரமணியம் கூறியதாவது, மாநிலத்தில் தொழிற்துறையில் முன்னோற்றம் அடையும் நோக்கில், தொழில் முனைவோருக்கு தேவையான இடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தொழில் முனைவோருக்கு இடம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் அதேநேரத்தில், மாநில தொழில் உள்கட்டமைப்பு கழகத்தின் விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில், விப்ரோ நிறுவனம் உட்பட 46 நிறுவனங்களுக்கு 172 ஏக்கர் இடம் விஷாக் தகவல் தொடர்பு தொழிற்பேட்டையில், ஆந்திர பிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகம் வழங்கியது. ஆனால், அந்த இடத்தில் 9 நிறுவனங்கள் மட்டுமே தொழிற்சாலைகளை அமைத்துள்ளது. மற்ற நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்காமல் விட்டிருப்பதன் காரணம் குறித்த அறிக்கை விரைவில் கிடைக்க உள்ளது. தொழிற்சாலைகளை அமைத்துள்ள சில நிறுவனங்களும், தங்கள் ஒப்பந்தத்தை தகுந்த முறையில் கடைபிடிக்கவில்லை. அவற்றில் மாநில அரசு நிர்ணயித்துள்ள வேலைவாய்ப்பை வழங்க தவறியுள்ளன என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|