தொழிற்துறை உற்பத்தி சரிவால் "சென்செக்ஸ்' 365 புள்ளிகள் வீழ்ச்சிதொழிற்துறை உற்பத்தி சரிவால் "சென்செக்ஸ்' 365 புள்ளிகள் வீழ்ச்சி ... ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தை ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தை ...
ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.3 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2011
05:21

புதுடில்லி : நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறியீட்டு எண், கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில், 3.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின், இதே ஜூலை மாதத்தில், 9.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல், தயாரிப்பு மற்றும் சுரங்கம் ஆகிய முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறைந்து போனதே, தற்போது ஏற்பட்டுள்ள தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் சரிவு நிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது. சென்ற ஜூலை மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, சென்றாண்டின், இதே மாதத்தில், 10.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று, பொறியியல் துறை உற்பத்தி வளர்ச்சியும், 40.30 சதவீதம் என்ற அளவிலிருந்து, 15.2 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. சுரங்கத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே மாதத்தில், 8.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது. சென்ற ஜூலை மாதத்தில், இடைநிலைப் பொருள்களின் உற்பத்தி, 1.1 சதவீதம் என்றளவில் மிகவும் குறைந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே மாதத்தில், 8.5 சதவீதம் என்றளவில் அதிகரித்திருந்தது. இதே போல், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி வளர்ச்சி, 14.8 சதவீதம் என்ற அளவிலிருந்து, 8.6 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது. இருப்பினும், மின்சாரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 13.1 சதவீதமாக சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், 3.7 சதவீதமாக மிகவும் குறைந்து காணப்பட்டது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறியீட்டு எண், 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில், 9.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், தயாரிப்பு துறை, 6 சதவீதமும் ( 10.5 சதவீதம்), சுரங்கத்துறை 1.1 சதவீதமும் (8.2 சதவீதம்), மின்சாரத் துறை 9.4 சதவீதமும் (5 சதவீதம்) வளர்ச்சி கண்டுள்ளன. சென்ற ஜூலை மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ள நிலையிலும், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. முக்கிய எட்டு துறைகளின் கீழ் இடம் பெறும், சிமென்ட் துறை மற்றும் உருக்கு பொருள்கள் உற்பத்தி வளர்ச்சி முறையே, 15.5 சதவீதம் மற்றும் 10.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், முறையே, 0.2 சதவீதம் மற்றும் 2.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்திருந்தது. இது தவிர, இயற்கை எரிவாயு உற்பத்தி துறையின் வளர்ச்சி, 8.2 சதவீதமாகவும், உரத் துறைகளின் வளர்ச்சி, 1.6 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி, வெள்ளியன்று நடைபெறும் நிதிக் கொள்கை குறித்த அதன் ஆய்வறிக்கை கூட்டத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை, மேலும், உயர்த்தும் அல்லது இதே நிலை தொடர வழி வகை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரும் 14ம் தேதி அறிவிக்கப்பட உள்ள, ஆகஸ்ட் மாதத்திற்கான பொதுப் பணவீக்கம், 10 சதவீதம் என்ற அளவில், இரட்டை இலக்கத்தை தொடும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என ஒரு சாராரும்,பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு, வட்டி விகிதங்களை உயர்த்தாது என்று மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)