பதிவு செய்த நாள்
13 செப்2011
11:35
துபாய்: உருக்கு ஆலை துறையில் உலகி்ன் முன்னணி நிறுவனமாக திகழும் ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் சவுதி அரேபியாவில்தனது உற்பத்தியை வரும் 2012-ம் ஆண்டில் துவக்க உள்ளதாக சவுதி அரேபியாவிற்கான நிர்வாக இயக்குனர்முகமது அல் ஜாபர் அல் வாதன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: 700 மில்லியன் அமெரிக்க டாலர் செல்வில் ஆண்டு ஒன்றிற்கு 6லட்சம் மெட்ரிக் டன் பைப்புகள் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை சார்ந்த தொழிலில் ஈடுபட உள்ளது.அடுத்துவரும் ஐந்தாண்டிற்குள் 3 பில்லியின் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில்ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் சவுதியை சேர்ந்த பின்ஜரல்லா நிறுவனத்தில் 51 சதவீத பங்களிப்புடன் ஆண்டு ஒன்றிற்கு 5 லட்சம் மெட்ரிக்டன் பைப்புகளை உற்பத்தி செய்யப்படும் என அறிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|