பதிவு செய்த நாள்
13 செப்2011
14:48
ராஜ்கோட்: வரும் 2020 ஆண்டில் உலகில் உள்ள 5 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்தியபார்மஸி நிறுவனங்கள் திகழும் என ஐகான் மார்கெட்டிங் கன்சல்டன்சி நிறுவனரும் முதல்வருமான ஆஸாஸ் மோடி வாலா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள பார்மஸி நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 7முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சியடையும். இந்தியர்களை பொறுத்தவரையில் தங்களின் வருமானத்தில் ஒரு சதவீதம் வரையில் மருந்து பொருட்களுக்காக செலவிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதால் வரும் 2020-ல் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும்.மெட்ரோநகரத்தை பொறுத்தவரையில் கடந்த ஐந்தாண்டுகளில் பார்மஸி துறை 14 முதல் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.ஊரகப்பகுதியை பொறுத்தவரையில்வளர்ச்சி 25சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இருப்பினும் 2020 ஆண்டுகளில் இவை 20 சதவீதம் அதிகரிக்கிகூடும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|