பதிவு செய்த நாள்
16 செப்2011
03:26
சென்னை : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சைனா ஒயர்லெஸ் டெக்னாலஜிஸ் குழுமத்தின் ஓர் அங்கமான கூல்பேட் நிறுவனத்துடன் இணைந்து, டி.530 என்ற ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்பில் செயல்படும், சி.டி.எம்.ஏ., மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் கேரளா) தலைவர் ராகேஷ் சிங் கூறியதாவது: நாடு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனம், 24 ஆயிரம் டவர்கள் மூலம் 6 லட்சம் கிராமங்களுக்கு, மொபைல் போன் சேவை வழங்கி வருகிறது. தற்போது, 799 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை, 70 மாடல்களில் சி.டி.எம்.ஏ., மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கூல்பேட் நிறுவனத்துடன் இணைந்து, ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்பில் செயல்படும் சி.டி.எம்.ஏ., மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளோம். இதில், வினாடிக்கு, 3.1 மெகா பைட் வேகத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். 3.5 அங்குலத்தில் தொடு திரை தொழில்நுட்பத்தில், தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் விலை, 7,999 ரூபாயாகும். இவ்வாறு ராகேஷ் சிங் கூறினார். இந்நிகழ்ச்சியில், கூல்பேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாமிஅல் லவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|