பதிவு செய்த நாள்
16 செப்2011
03:27
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. நாட்டின் பொது பணவீக்கம், 9.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற அச்சப்பாட்டால், மதியம் வரை பங்கு வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தது. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி, தொலைத் தொடர்பு போன்ற பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 166.94 புள்ளிகள் அதிகரித்து, 16,876.54 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 16,922.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,545.47 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 63.15 புள்ளிகள் உயர்ந்து, 5,075.70 புள்ளிகளில், நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,091.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,967.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|