"சென்செக்ஸ்' 167 புள்ளிகள் அதிகரிப்பு"சென்செக்ஸ்' 167 புள்ளிகள் அதிகரிப்பு ... இணையதளத்தில் செய்திகள் : தினமலருடன் யாஹூ இந்தியா கூட்டு இணையதளத்தில் செய்திகள் : தினமலருடன் யாஹூ இந்தியா கூட்டு ...
உணவுப் பொருள் பணவீக்கம் 9.47 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2011
03:28

புதுடில்லி : நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், செப்டம்பர் 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.47 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 9.55 சதவீதம் என்ற அளவில், உயர்ந்து இருந்தது. ஆக, உணவுப் பொருள் பணவீக்கம், 0.8 சதவீதம் குறைந்துள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள் மற்றும் கோதுமை விலை குறைந்திருந்தது. கடந்த 2010ம் ஆண்டு, இதே வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 15.16 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து இருந்தது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயத்தின் விலை ஆண்டு கணக்கில், 43 சதவீதம் அதிகரித்திருந்தது. இதேபோன்று, உருளைக் கிழங்கு (21 சதவீதம்), பழங்கள் (22.64 சதவீதம்), காய்கறிகள் (17.47 சதவீதம்), பால் (10.02 சதவீதம்), இதர தானியங்கள் (5.02 சதவீதம்) போன்றவற்றின் விலையும் அதிகரித்திருந்தது. ஆண்டுக் கணக்கில் ஒப்பிடும் போது, பல உணவு பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றாலும், வாரந்திர அடிப்படையில், குறிப்பிட்ட சில உணவுப் பொருள்களின் விலை சற்று குறைந்திருந்தது. மொத்த உணவுப் பொருள் பணவீக்கத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை, செப்டம்பர் 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 13.04 சதவீத அளவிற்கு இருந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 13.34 சதவீதமாக இருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில், அத்தியாவசியப் பொருள்களின் பங்களிப்பு, 20 சதவீதம் என்றளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொது பணவீக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பொது பணவீக்கம், 9.78 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, கடந்த 18 மாதங்களில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை, 11 முறை உயர்த்தியுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின், ஆய்வு கூட்டம், இன்று நடைபெறுகிறது. இதில், வங்கிகளுக்கான வட்டி விகிதம், மீண்டும் உயர்த்தப்படலாம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இருப்பினும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)