பதிவு செய்த நாள்
17 செப்2011
05:03
மும்பை : ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி நல்ல அளவில் அதிகரித்துள்ளது. கச்சா உருக்கு உற்பத்தி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6.64 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 23 சதவீதம் (5.39 லட்சம் டன்) அதிகமாகும். இதே மாதங்களில், இதன் தட்டை வடிவ உருக்கு பொருள்கள் (தகடுகள்) உற்பத்தி, 8 சதவீதம் அதிகரித்து, 4.46 லட்சம் டன்னிலிருந்து, 4.84 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உருக்கு கம்பிகள் உள்ளிட்ட நீள் வகை, உருக்கு பொருள்கள் உற்பத்தி, 44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 87 ஆயிரம் டன்னிலிருந்து, 1.25 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் அதன் விஜயநகர் தொழிற்சாலையில், விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ஆண்டுக்கு, 32 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட இப்பிரிவு, சென்ற ஜூலை மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, ஒட்டுமொத்த உருக்குப்பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|