பதிவு செய்த நாள்
18 செப்2011
01:36
மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 429 கோடி டாலர் (20 ஆயிரத்து 163 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 650 கோடி டாலராக (14 லட்சத்து 8 ஆயிரத்து 708 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சென்ற செப்டம்பர் 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 160 கோடி டாலர் அதிகரித்து, 32 ஆயிரத்து 78 கோடி டாலராக உயர்ந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, தொடர்ந்து மூன்று வாரங்களாக அதிகரித்து வந்த அன்னியச் செலாவணி கையிருப்பு, தற்போது குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணியின் மதிப்பு, 4.50 கோடி டாலர் குறைந்து, 293 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 7 கோடி டாலர் சரிவடைந்து, 455 கோடி டாலராக குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமுமின்றி 2,832 கோடி டாலராக உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|