பதிவு செய்த நாள்
18 செப்2011
15:03
கொல்கத்தா: இந்தியர்களின் தலைமுடி வெளிநாட்டவர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் தலைமுடியின் திடம் ,நீளம், மற்றும் வண்ணம் காரணமாக வெளிநாட்டவர்கள் விரும்புவதாக அலிபாபா.காம் இணைய தளத்தின் பொது மேலாளர் சந்தீப் தேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்குறிப்பிடுவதாவது: இணையதளம் மூலம் நடத்தப்படும் விற்பனையில் இந்தியர்களின் தலைமுடி 42 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளதாக தெரிவி்த்தார். இந்தியர்களின் தலைமுடி மற்ற தலைமுடியுடன் ஒத்துபோவதாகவும் சாயமிடுவதற்கு எளிதாகவும் இருப்பதாக தெரிவி்த்துள்ளார். மேலும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் தனியார் அமைப்பு ஒன்று திருப்பதி கோயில் ஏலம் விடப்படும் தலைமுடி மற்றும் தமிழ்நாட்டில் சிவன், முருகன் ,பெருமாள் கோவில்களில் மொட்டையின் மூலம் கிடைக்கும் தலைமுடி மூலம் ஆண்டு ஒன்றிற்கு மில்லியன் டாலர் அளவிற்கு பணம் சம்பாதிப்பதாக தெரவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|