பதிவு செய்த நாள்
18 செப்2011
15:40
புதுடில்லி: சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாது பொருட்களி்ன் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதி யமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாதுவின் மீது 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதனை 30 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க நிதியமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்படும் எனவும், வரியை அதிகரிப்பதால் உள்நாட்டில் நீண்ட கால தேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று அமைச்சர் பென்னி பிரசாத் வர்மா தெரிவித்துள்ளார். மேலும்வரியை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதி்யில் 20 சதவீதம் குறையும என்று எதிர்பார்ப்பதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 22.5 சதவீதம் வரை குறைந்து 98 மில்லியன் டன்னிலி்ருந்து 75 மில்லியன் டன்னாக மாறுபடும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|