பதிவு செய்த நாள்
18 செப்2011
17:01
சென்னை: வங்கிகளில் உள்ள வராக்கடன்களை வசூலிப்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை இந்திய தொழல் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அசோசம் அமைப்பின் வங்கி நிதி விவகாரங்களுக்கான தேசியகுழு தலைவரும், ஐஓபி வங்கியின் தலைவருமான நரேந்திரா அறிக்கையை வெளியிட்டார்.கடந்த 90 ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த வராக்கடன்களின் அளவு 15 சதவீதமாக இருந்தது.தற்போது இது 2 சதவீதமாக குறைந்துள்ளது.விவசாயம்,நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் மூலம் வராக்கடனின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. காரணம் இத்துறைகளுக்கு போதுமான காப்பீடு திட்டங்கள் இல்லாமல் இருப்பதே காரணமாகும். இத்துறைகளுக்கு போதுமான காப்பீடு திட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் .மேலும் தனி கணக்கு தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்வதன்மூலம் வாரக்கடன்களின் அளவை தெரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|