பதிவு செய்த நாள்
19 செப்2011
14:37
மும்பை: எல்.ஐ.சி.,நிறுவனத்திற்கு புதிய சேர்மன் விரைவில் நியமிக்கப்படுவர் என நிதித்துறை அதிகாரி தெரிவி்த்துள்ளார். இது குறித்து நிதித்துறைசெயலாளர் டிகே மிட்டல் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் மிகப்பெரிய நிர்வாகத்திற்கு சரியான நிர்வாகத்திற்ன் உள்ள ஆட்களை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார். தற்போது எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு என முழுநேர தலைமை அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் தலைமைபொறுப்பு வகித்து வந்த டிஎஸ்., விஜயனின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்காலிக தலைவராக ராகேஷ்சிங், மற்றும் டி.கே.மெஹ்ரோட்ரா ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.இருப்பினும் தேர்வு கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவதால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் தலைவர் நியமிக்கப்பட்டு விடுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|