பதிவு செய்த நாள்
19 செப்2011
16:58
மும்பை : வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்தஇந்தியபங்கு சந்தை இன்று சரிவுடன் துவங்கியுள்ளது,ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது.திங்கள் அன்று துவங்கிய வர்த்தகத்தி்ன்போது எண்ணெய்விலை குறைந்து காணப்பட்டதும் காரணமாக கூறப்பட்டது. ஹாங்காங்,தென்கொரியா, சிங்கப்பூர், தைவான், இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்குசந்தையிலும் எதிரொலித்தது. மேலும் எல்அண்டு டி நிறுவனத்தின் பங்குகள், வங்கிகள், உலோகப்பொருட்கள் உற்பத்தி துறைகள் , மின்சார தொடர்புடைய துறைகளின் பங்குகளின் சரிவால் இந்தியபங்குசந்தை கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நுகர்வோர் துறை மற்றும் ஆட்டோ மொபைல்துறையி சேர்ந்த மாருதி சுசூகி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றதால் பங்குகள் சரிவிலிருந்து ஓரளவு மீண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|