பதிவு செய்த நாள்
20 செப்2011
13:44
புதுடில்லி: 234 கோடி மதிப்பிலான 13 அந்நிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது.இந்திய தொழில் நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். இதன்படி12 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியும், 15 திட்டங்களுக்கு தற்காலி்கமாக அனுமதியை நிறுத்திவைத்தும், 7திட்டங்களுக்கு அனுமதியை மறுத்தும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தி்ல் ரூ. 122.79 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியருக்கு சொந்தமான பங்குகளை வெளிநாட்டு வாழக இந்தியர் ஒருவருக்கு மாற்றம் செய்ய அனுமதிக்கும் படி விண்ணப்பித்திருந்த வோடாபோன் நிறுவனத்திற்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|