பதிவு செய்த நாள்
20 செப்2011
14:18
மும்பை: இந்திய தங்க நகை தொழில் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் தங்க நானோகார் உருவாக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்திய நகை தொழில் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த டாடா குழுமத்தை சேர்ந்த கோல்டு பிளஸ் நிறுவனம் விரும்பியது. இதற்காக டாட நிறுவனத்தின் நானோ காரை தங்கத்தில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஓசூரில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் தங்க நகை தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது. உலகின் முதல் தங்க கார் என்று பெருமையை பெற்றுள்ள இந்த காரை உருவாக்குவதற்கு 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 22 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார் விற்பனைக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|