சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தைசரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை ... மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது பங்குச்சந்தை மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது பங்குச்சந்தை ...
கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது : ஐ.எம்.எப்., திட்டவட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2011
10:34

வாஷிங்டன் : "யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி, பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில், அவற்றுக்கு கடன் தவணைகள் அளிப்பதற்கான பணம், சர்வதேச நிதியமைப்பிடம் (ஐ.எம்.எப்.,) இல்லை' என, அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார். "யூரோ' கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளில், தற்போது கிரீஸ் எந்நேரமும் திவாலாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தலைவர்களிடம், கிரீசை திவால் ஆவதில் இருந்து மீட்பதற்கு, எவ்வித யோசனையும் இல்லை. இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப்., தலைமையகத்தில், இரு நாட்களாக, உலக நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள், கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் வராமல் தடுப்பது குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டைன் லகார்ட், "ஐ.எம்.எப்.,பிடம் தற்போது உள்ள பணம், தற்போதைய பிரச்னைகளைச் சமாளிக்க போதுமானது தான். ஆனால், இந்தக் கடன் நெருக்கடி, பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில், அவற்றுக்கு கடன் தவணைகள் அளிக்க, ஐ.எம்.எப்.,பிடம் பணம் இல்லை' எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா நாட்டுப் பிரதிநிதிகள், மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படுமானால், அதைப் போக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். அதேநேரம், கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் கூறுகையில், "கிரீஸ் ஒரு போதும் திவாலாகாது. யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறாது. அந்த நிகழ்வுகள் நடந்தால், அது யூரோ மண்டலத்தை மட்டுமல்லாமல், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, நாங்கள் உணர்ந்திருக்கிறோம்' என உறுதியளித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)