பதிவு செய்த நாள்
26 செப்2011
11:02
மும்பை : கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான இன்று, கடுமையான சரிவு காணப்படுகிறது. காலை நேர வர்த்தகத்தின் போது 16 ஆயிரம் புள்ளிளுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், முன்பகல் வர்த்தகத்தின் போது 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் உலோகத்துறை பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்ததே இந்திய பங்குச் சந்தைகளின் அதிரடி சரிவிற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுமார் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக கிரீஸ் மற்றும் அமெரிக்காவில் காணப்படும் கடுமையான கடன் நெருக்கடியின் எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|