பதிவு செய்த நாள்
26 செப்2011
12:15
விருதுநகர்:நூல் விலை உயர்வு காரணமாக, சத்திரப்பட்டியில், பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் உற்பத்தியாகும் பேண்டேஜ் துணி உற்பத்தி, இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேண்டேஜ் உற்பத்திக்கு முக்கிய தேவையான, 40 ம் நம்பர் நூல், 50 கிலோ கொண்ட மூட்டை, உச்ச கட்டமாக, 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.தற்போது, மத்திய அரசு, வெளி நாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்ததால், நூல் விலை கட்டுப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன், 7,000 ரூபாயாக குறைந்திருந்தது. கடந்த, 10 நாட்களாக மீண்டும் நூல் விலை அதிகரித்து வருகிறது. அதிகரித்த நூல் விலையை காரணம் காட்டி, பேண்டேஜ் துணி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|