பதிவு செய்த நாள்
27 செப்2011
02:28
மும்பை:சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள ருச்சி சோயா இண்டஸ் ட்ரீஸ் நிறுவனம் அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு 21 லட்சம் டன் உற்பத்தி திறனில், சமையல் எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. நடப்பு நிதி யாண்டின், இறுதிக்குள் கூடுதலாக 10 லட்சம் டன் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யவுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்க்கான தேவை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, நிறுவனம் உற்பத்தி திறனை உயர்த்தும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விரிவாக்க திட்டம் நிறைவ டைந்து, 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து உற்பத்தி தொடங்கும் என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தினேஷ் சகாரா தெரிவித்தார். ருச்சி சோயா நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் ஆண்டுக்கு, 15-20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2010 -11ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 202 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|