பதிவு செய்த நாள்
27 செப்2011
02:30
சென்னை:தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மலபார் கோல்டு நிறுவனம், சென்னையில் அதன் முதல் கிளையை தொடங்குகிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் எம்.பி. அஹமத் கூறியதாவது:அழகான மற்றும் நவநாகரிக நகைகளை, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பார்த்து தேர்வு செய்யும் வகையில், இப்புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஷோரூம், வரும் அக்., 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. நிறுவனத்தின் 61வது கிளையாக அமையவுள்ள இந்த புதிய ஷோரூமில், தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில், பாரம்பரியமும், நவீனமும் கலந்து, கைவினை கலைஞர்களை கொண்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எத்தினிக்' நகைகள் இடம் பெறுகின்றன. மேலும், பழங்கால நடனங்கள் மற்றும் சிற்பங்களின் வடிவங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "டிவைன்,' "ஏரா' என்ற ஜொலிக்கும் வைர நகை தொகுப்புகளுடன் மேலும் பல நவீன தங்க நகைகளும் இப்புதிய ஷோரூமில் கிடைக்கும்.நிறுவனம், அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்குள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், புதிதாக 20 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அஹமத் கூறினார். இப்புதிய ஷோரூம் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷெர் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு நிகராக இப்புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் ஒவ்வொரு நகையும், பி.ஐ.எஸ். 916 (தங்கநகை), ஐ.ஜி.ஐ., சான்றிதழ்(வைர நகை), பி.ஜி.ஐ., சான்று (பிளாட்டினம் நகை) பெற்றவை. வாடிக்கையாளர்கள் நகைகளின் உண்மைத் தன்மையை உடனுக்குடன், நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், "கேரட் அனலைசர்' சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு விற்கும் ஒவ்வொரு நகைக்கான விலைப்பட்டியலும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக விளங்கும். வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இங்கு வாங்கும் நகைகளில், கற்களை பொருத்துவது உள்ளிட்ட பழுதுபார்ப்பு சேவைகளை, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் வசதி, வாங்கிய நகைகளை, விற்பனை செய்யும் போது, அன்றைய விலையில் திரும்ப வாங்கிக் கொள்வதற்கான உத்தரவாதம் ஆகியவை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|