பதிவு செய்த நாள்
27 செப்2011
02:32
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத் துடன் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளின், கடன் பிரச்னைகளால், திங்களன்று நம் நாட்டிற்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கிய இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், உலோகம், எண்ணெய், எரிவாயு, வங்கி, நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட தொகையில், வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில், ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததையடுத்து, நேற்றைய வியாபாரத்தின் இடையே "சென்செக்ஸ்' 16,000 புள்ளி களுக்கும் கீழ் சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், 110.96 புள்ளிகள் சரிவுடன், 16,051.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,209.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,801.01 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங் களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 32.35 புள்ளிகள் குறைந்து, 4,835.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 4,879.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,758. 85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|