மலபார் கோல்டு: சென்னையில் புதிய கிளைமலபார் கோல்டு: சென்னையில் புதிய கிளை ... விலை உயர்வால் பெட்ரோல் பயன்பாடு குறைகிறது விலை உயர்வால் பெட்ரோல் பயன்பாடு குறைகிறது ...
"சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2011
02:32

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத் துடன் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளின், கடன் பிரச்னைகளால், திங்களன்று நம் நாட்டிற்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கிய இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், உலோகம், எண்ணெய், எரிவாயு, வங்கி, நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட தொகையில், வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில், ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததையடுத்து, நேற்றைய வியாபாரத்தின் இடையே "சென்செக்ஸ்' 16,000 புள்ளி களுக்கும் கீழ் சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், 110.96 புள்ளிகள் சரிவுடன், 16,051.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,209.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,801.01 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங் களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 32.35 புள்ளிகள் குறைந்து, 4,835.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 4,879.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,758. 85 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)