பதிவு செய்த நாள்
27 செப்2011
15:30
கரூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு கரூரில் பூ, இலை, பொரி போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நவராத்திரி விழா நாளை முதல் தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுவதினால் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 5ம் தேதி ஆயுத பூஜை வருவதினால் கரூர் பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. அரிசி விலை உயர்வால் தற்போது பொரி விலையும் உயர்ந்துள்ளது. கரூரில் இருந்து ஈரோடு, திருச்சி, நாமக்கல், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொரி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மூட்டை பொரி ரூ.400 வரை விற்கப்படுகிறது. வாழை இலையின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ரூ.1.50க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு வாழை இலை தற்போது ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|