பதிவு செய்த நாள்
28 செப்2011
00:22
கோல்கட்டா:நடப்பு 2011ம் ஆண்டில், கார் விற்பனையை மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக, நிசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், சென்ற 2010ம் ஆண்டு, 13 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையை நடப்பாண்டில், 40 ஆயிரம் கார்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமினோபு டோக்குயாமா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சென்னை கார் தொழிற்சாலையின் உற்பத்தி திறன், வரும், 2015ம் ஆண்டிற்குள், இரண்டு லட்சம் கார்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, நான்கு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நிறுவனம்,4,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது. நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டிற்குள், இந்திய டீலர்களின் எண்ணிக்கையை, 80 லிருந்து, 100 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|