பதிவு செய்த நாள்
28 செப்2011
00:22
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், உள்நாட்டில் செயற்கை ரப்பர் பயன்பாடு 11 சதவீதம் உயர்ந்து 36 ஆயிரத்து 945 டன்னாக அதிகரித்துள்ளது. இதே மாதத்தில், உள்நாட்டில் செயற்கை ரப்பர் உற்பத்தி 9,279 டன்னாக உள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஜுன் மாதம், நாட்டின் செயற்கை ரப்பர் பயன்பாடு 33ஆயிரத்து 235 டன்னாகவும், உற்பத்தி 9,254 டன் என்ற அளவிலும் இருந்தது. எனினும், மாதாந்திர அடிப்படையில், செயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜூன் மாதம் 2 சதவீதம் சரிந்து 9,279 டன்னாக உள்ளது. இது, முந்தைய மே மாதம் 9,468 டன்னாக காணப்பட்டது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் செயற்கை ரப்பர் உற்பத்தி 11 சதவீதம் உயர்ந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 575 டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 99 ஆயிரத்து 160 டன்னாக இருந்தது. இதே காலத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து 956 டன்னில் இருந்து, 28 ஆயிரத்து 9 டன்னாக உயர்ந்துள்ளது.செயற்கை ரப்பர் பெரும்பாலும் டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மோட்டார் வாகன டயர் துறையின் பயன்பாடு சென்ற, ஜூன் மாதம் 16 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து 907 டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 23 ஆயிரத்து 256 டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், டயர் துறைக்கான செயற்கை ரப்பர் பயன்பாடு 16 சதவீதம் அதிகரித்து 80 ஆயிரத்து 579 டன்னாக உயர்ந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 69 ஆயிரத்து 648 டன்னாக இருந்தது.இதே காலங்களில் இந்தியாவின் செயற்கை ரப்பர் இறக்குமதி, 20 சதவீதம் அதிகரித்து 24 ஆயிரத்து 795 டன்னில் இருந்து, 29 ஆயிரத்து 641 டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|