பதிவு செய்த நாள்
28 செப்2011
00:26
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஒரு சில தினங்களாக, உள்நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும், வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், ஐரோப்பிய பிராந்தியத்தில், ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிக்கு, உரிய தீர்வு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதர ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் பங்கு வர்த்தகம் நேற்று சூடுபிடித்தது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும், காலையிலிருந்து வர்த்தகம் முடியும் வரை பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 472.93 புள்ளிகள் உயர்ந்து, 16,524.03 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,551.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,282.74 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், சிப்லா நிறுவனம் தவிர, ஏனைய 29 நிறுவனப் பங்குகளின் விலை, 0.04 சதவீதம் முதல் 8.46 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 135.85 புள்ளிகள் அதிகரித்து, 4,971.25 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக, 4,982.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,905.15புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|