பதிவு செய்த நாள்
28 செப்2011
16:15
ராஜ்காட்: பண வீக்கம், வங்கி வட்டிவீதம் அதிகரித்து வந்த போதிலும், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித்துறை 2020-ம் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியைச் சேர்ந்த மோட்டார் வாகன கன்சல்டன்சியின் முதன்மை செயலர் ஆசாத்மொட்டிலா கூறுகையில், தற்போது உள்நாட்டு தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தித்துறை 30 பில்லியன் டாலராக உள்ளது. இந்த நிதியாண்டில் மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் 36 சதவீத வளர்ச்சி எட்டியுள்ளது. 5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியும் நடந்துள்ளது. இத்துறையில் அமெரிக்காவின் புதிய முதலீடு ரூ. 2 பி்ல்லியன் டாலர் ஆகும். இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான டாடா, மாருதி, போர்ட் உள்ளிட்டவைகள் தங்களது உதிரி பாகங்கள் உற்பத்தியில் வேகமாக வளர்ச்சியினை எட்டி வருகிறது. வரும் 2015-16-ம் ஆண்டுகளில் உலக அளவில் மோட்டார் வாகன பொருட்களின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|