பதிவு செய்த நாள்
29 செப்2011
00:31
புதுடில்லி:பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வரியை நீக்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.கடந்த 2004-05ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பங்கு பரிவர்த்தனை வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார். இதனால்,பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டனர். இந்த வரியை நீக்க வேண்டும் என இத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், நிதியமைச்சகம் மற்றும் பங்குச் சந்தைகளின் உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கு பரிவர்த்தனை வரியை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து, பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் வருவாய்துறை ஆகியவை இணைந்து பல்வேறு தீர்வுகளை உருவாக்கியுள்ளன. இவற்றை நிதியமைச்சகம் இறுதி செய்த பிறகு, அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 2,223 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட 10 சதவீதம் குறைவு. பங்கு பரிவர்த்தனை வரி நீக்கப்படும் பட்சத்தில், பங்கு வர்த்தகர்களின் செலவினம் குறையும். மேலும், பங்கு வர்த்தகமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|