பதிவு செய்த நாள்
29 செப்2011
00:34
சென்னை:ஆன்-லைன் வர்த்தகத்தில், சென்னை 5வது இடத்தைப் பிடித்துள்ளதாக, இபே இந்தியா நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.வேகமாக வளர்ந்து வரும், இந்திய பொருளாதாரத்தில், ஆன்-லைன் மூலமாக ஷாப்பிங் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் உதவியுடன், ஆன்-லைன் வாயிலாக பொருள்களை வாங்க, விற்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதில், புதுடில்லி முதலிடம் வகிக்கிறது. இந்த வரிசையில், மும்பை,பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றுள்ளன.ஆன்-லைன் வாயிலாக, ஷாப்பிங் செய்வதில், சென்னைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஆன்-லைன் மூலம் பொருள்களை கொள்முதல் செய்ததில், வாட்டர் பில்டர், நவநாகரீக கைகெடிகாரங்கள், தொலைபேசி ஸ்கிராட்ச் கார்டு ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன. அதேபோல், ஆன்-லைன் வாயிலான இறக்குமதியில், டான்சானைட் ஜெம் கற்கள், கெப்பாசிட்டர், கேமரா லென்ஸ் ஆகியவையும், ஏற்றுமதியில், பளிங்கு கற்கள், தபால் தலைகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.சென்ற 2010ம் ஆண்டில், ஆன்-லைன் வர்த்கத்தின் சந்தை மதிப்பு 6,300 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டில் 8,630 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி காணும் என , இந்நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் ராமச்சந்திரன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|