பதிவு செய்த நாள்
29 செப்2011
00:46
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் நிலவி வரும் குழப்ப நிலையாலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா, ஜப்பான், சீனா, தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அதே சமயம், சிங்கப்பூர், ஹாங்காங், ஆகிய நாடுகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.இந்தியப் பங்கு வர்த்தகத்தில், வங்கி, உலோகம், மின்சாரம், மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, நுகர் பொருள்கள், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 78.01 புள்ளிகள் குறைந்து, 16,446.02 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,663.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,363.63 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 25.35 புள்ளிகள் சரிவடைந்து, 4,945.90 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,006.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,918.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|