பதிவு செய்த நாள்
29 செப்2011
15:38
பெங்களுரூ: இந்தியாவில் சாப்ட்வேர் தொழிலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, இந்தாண்டிற்கான 2011-ம் ஆண்டின் அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் போட்டியாக புதிய மென்பொருள்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் இந்தியாவில் செயல்படும் விப்ரோ நிறுவனம் ஒன்று. இந்நிலையில் உலகளவில் சிறந்த சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்ட் , பன்முக மென்பொருள், தகவல் தொழில்நுட்பத்தில் சாப்ட்வேர் தயாரிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு 2011-ம் ஆண்டிற்கான விருதினை வழங்குகிறது. இதில் உலகம் முழுவதும் 3 ஆயிரம் நிறுவனங்கள் கலநது கொண்டன. இதில் விப்ரோ நிறுவனம் இந்த விருதினை பெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் எங்களின் மென்பொருள் தயாரிப்பில் எங்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என விப்ரோ நிறுவனத்தில் வர்த்தக சேவைக்கான தலைமை நிர்வாகி ஸ்ரீனிபெலியா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|