பதிவு செய்த நாள்
29 செப்2011
16:46
புதுடில்லி: முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமாக ஏர்டெல், நோக்கியோவுடன் இணைந்து 7 ஆப்ரிக்க நாடுகளில் 2-ஜி மற்றும் 3-ஜி சேவையினை துவங்க உள்ளது. இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.எஸ்.என். என்ற பெயரில் 7 ஆப்ரிக்க நாடுகளில் , நோக்கியோவுடன் இணைந்து முதல்கட்டமாக 2-ஜி சேவையினை துவங்க உள்ளது. இதற்காக ஜாம்பியா, மடாகஸ்கர், தான்சானியா, உகண்டா , கென்யா , காங்கோ, மலாவி உள்ளிட்ட ஏழு நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு்ள்ளது என்ற தகவல் இல்லை. அதுமட்டுமின்றி, விரைவில் 3-ஜி சேவை, அதிவிரைவு இன்டர்நெட் சேவை உள்ளிட்டவைகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே ஏர்டெல், ஆசியா, ஆப்ரிக்காவின் சில நாடுகள் என 19 நாடுகளில் தனது சேவையினை அபிவிருத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|