நியாயமற்ற முறையில் விலை நிர்ணயம் :புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களுக்கு அதிக இழப்புநியாயமற்ற முறையில் விலை நிர்ணயம் :புதிய பங்கு வெளியீடுகளில் ... ... மத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் பிரணாப் மத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் ... ...
"சென்செக்ஸ்' 244 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2011
00:49

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, மீண்டும் சுணக்கம் கண்டது. ஆக, நடப்பு வாரத்தில், பங்கு வியாபாரம் ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. நேற்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், மந்தமாக இருந்தது. இது, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அன்னிய மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ததாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்து போனது. குறிப்பாக, உலோகம், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 244.31 புள்ளிகள் சரிவடைந்து, 16,453.76 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,745.16 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,404.78 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய, இரு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தேசியப் பங்குச் சந்தையிலும் வர்த்தகம், மந்தமாக இருந்தது. இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 72.20 புள்ளிகள் சரிந்து, 4,943.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,025.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,924.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)