இந்தியாவின் அயல்நாட்டு கடன் 1,050 கோடி டாலர் உயர்வுஇந்தியாவின் அயல்நாட்டு கடன் 1,050 கோடி டாலர் உயர்வு ... மாருதி சுசுகி வாகன விற்பனை சரிவு மாருதி சுசுகி வாகன விற்பனை சரிவு ...
"அட்வான்ஸ் புக்கிங்'கி­ல் சரக்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2011
09:20

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், நேற்றே அட்வான்ஸ் புக்கிங்கில் சரக்குகளை வாங்கி, இருப்பு வைக்கத் தொடங்கி விட்டனர். வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகம் முழுக்க உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேட்பாளர்களாக களத்தில் உள்ளவர்கள் வாக்காளர்களைக் கவர, பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்., 2ம் தேதி) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபானக் கடைகள் மூடியிருக்க வேண்டும் என்று, அரசு உத்தரவிட்டது.ஆனால், தேர்தல் நேரம் என்பதால், வேட்பாளர்கள் சின்னம் முடிவாகும் முன்னரே ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டனர். அவர்களது ஆதரவாளர்களையும், "திருப்தி'படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, குடிமகன்களை உற்சாகப்படுத்தினால் தான், தேர்தலில் தேவையான ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியாகி உள்ளது.அதனால், வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்றாலும், சரக்கு இல்லை என்ற சங்கடம் தங்களது ஆதரவு குடிமகன்களுக்கு இருக்கக் கூடாது என்ற உறுதியுடன், நேற்றே அவற்றை வாங்கி பாதுகாப்பாக (பதுக்கி) இருப்பு வைக்கத் தொடங்கி விட்டனர். இதனால் தங்களை, "குஷி'ப்படுத்த வேண்டியது வேட்பாளர்களின்,"கடமை' என்று, குடிமகன்களும் உற்சாகத்தில் உள்ளனர்.இது தவிர, தேர்தலை முன்னிட்டு சரக்கு விற்பனையில், "காசு' பார்க்கும் திட்டத்தில், கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கவும் வழக்கம் போல் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசார் என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், குடிமகன்கள் காட்டில் இன்று,"சரக்கு மழை' பலமாக பெய்யும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)