பதிவு செய்த நாள்
02 அக்2011
10:09
புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 20.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மாதத்தில் 85,565 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,08,006 கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் கார் விற்பனை சரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களான ஷிஃப்ட், ஹேட்ச்பேக் ஏ-ஸ்டார், சீடன் எஸ்.எக்ஸ்4 ஆகியவைகள் மானேசர் ஆலையில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 17.2 சதவீதமும், ஏற்றுமதி 47.5 சதவீதமும் சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|