பதிவு செய்த நாள்
02 அக்2011
11:52
புதுடில்லி : நாட்டின் 2வது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத கார் விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 57,808 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாததத்தில் 51,444 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 13.2 சதவீதமும், ஏற்றுமதி விற்பனை 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. தனது நீண்ட நாளைய தயாரிப்பான இயான் காரை ஹூண்டாய் நிறுவனம் இம்மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இது நிறுவனத்தின் கார் விற்பனையை மேலும் அதிகப்படும் எனவும், அதன் மூலம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் எனவும் ஹ6ண்டாய் நிறுவன விற்பனை இயக்குனர் அரவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் ஏ2 பிரிவு கார்களான சான்ட்ரோ, ஐ10, ஐ20 உள்ளிட்ட கார்கள் 49552ம், ஏ3 பிரிவு கார்களான அசன்ட், வெர்னா ஆகிய மாடல் கார்கள் 8051ம் விற்பனையாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|