பதிவு செய்த நாள்
05 அக்2011
02:25
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்றும் மிகவும் மோசமாக இருந்தது. தொடரும் சர்வதேச பிரச்னைகளால், இதர ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் பங்கு வியாபாரம் மேலும் ஆட்டம் கண்டது. இதனால், இந்திய பங்குச் சந்தைகளில், காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், இறுதி வரை பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இந்நிலையில், உள்நாட்டில், பாரத ஸ்டேட் வங்கியின் தரக்குறியீடு குறைக்கப்பட்டது. இதனால், இவ்வங்கியின்பங்குகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வங்கி துறைகளின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,வர்த்தகம் முடியும்போது, 286.59 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 15,864.86 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத் தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16, 202.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,745.43 புள்ளிகள் வரை யிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 77.35 புள்ளிகள் சரிவடைந்து, 4,772.15 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,869.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,728.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|