பி.எஸ்.இ. "சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சிபி.எஸ்.இ. "சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி ... இந்திய பங்குச் சந்தையின் சரிவு நிலையால்பரஸ்பர நிதித் திட்ட முதலீடு 40 சதவீதம் உயர்வு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - இந்திய பங்குச் சந்தையின் சரிவு நிலையால்பரஸ்பர நிதித் திட்ட முதலீடு 40 ... ...
பாரத ஸ்டேட் வங்கியின் தரக்குறியீடு குறைப்பு:பங்கின் விலை 4 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2011
02:35

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ) நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கியின், பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமைக்கான தரக் குறியீட்டை, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் குறைத்துள்ளது. இதனால், நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், இவ்வங்கி பங்கின் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 4.08 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டு 1,786.70 ரூபாயில் கைமாறியது. எஸ்.பீ.ஐ. யின் பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமை, நடப்பாண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, 7.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக இவ்வங்கி அறிவித்திருந்தது. பொதுவாக, பொதுத் துறை வங்கிகளின் இந்த பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமை, 8 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், இவ்வங்கியின் நிதி வலிமை இதை விட குறைந்ததால், மூடிஸ் நிறுவனம் இதன் தரக்குறியீட்டை "சி-' என்ற பிரிவிலிருந்து, ஒரு படி குறைத்து,"டீ+' என்ற பிரிவிற்கு தரம் குறைத்துள்ளது. இதையடுத்து, எஸ்.பீ.ஐ.யின் தரக் குறியீடு, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டீ.எப்.சி., ஆக்சிஸ் பேங்க் போன்ற வங்கிகளின் தரக்குறியீட்டை விட (சி-) குறைந்து போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எஸ்.பீ.ஐ.யின் தரக்குறியீடு குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, மத்திய அரசு இவ்வங்கியில் கூடுதல் பங்கு மூலதனத்தை அளிக்கும் என தெரிகிறது. அவ்வாறு அளிக்கப்படும் நிலையில், இதன் தரக்குறியீடு மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என, வங்கி துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். "சி-' தரக்குறியீடு என்பது ஒருவங்கிக்கு போதுமான நிதி வலிமை உள்ளது என்பதை குறிக்கிறது. அதேசமயம், "டீ+' என்பது, அவ்வங்யின் நிதி வலிமை மிதமான அளவிலேயே உள்ளது என்பதுடன், வெளியிலிருந்து நிதி ஆதாரம் தேவைப்படும் சாத்தியக் கூறு உள்ளது என்பதையும் குறிக்கிறது.இது தவிர, எஸ்.பீ.ஐ.யின் வசூலாகாத கடன்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற மதிப்பீடும், மூடிஸ்நிறுவனம், அதன் தரக்குறியீட்டை குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)