பதிவு செய்த நாள்
05 அக்2011
02:35
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ) நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கியின், பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமைக்கான தரக் குறியீட்டை, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் குறைத்துள்ளது. இதனால், நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், இவ்வங்கி பங்கின் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 4.08 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டு 1,786.70 ரூபாயில் கைமாறியது. எஸ்.பீ.ஐ. யின் பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமை, நடப்பாண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, 7.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக இவ்வங்கி அறிவித்திருந்தது. பொதுவாக, பொதுத் துறை வங்கிகளின் இந்த பங்கு மூலதனம் சார்ந்த நிதி வலிமை, 8 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், இவ்வங்கியின் நிதி வலிமை இதை விட குறைந்ததால், மூடிஸ் நிறுவனம் இதன் தரக்குறியீட்டை "சி-' என்ற பிரிவிலிருந்து, ஒரு படி குறைத்து,"டீ+' என்ற பிரிவிற்கு தரம் குறைத்துள்ளது. இதையடுத்து, எஸ்.பீ.ஐ.யின் தரக் குறியீடு, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டீ.எப்.சி., ஆக்சிஸ் பேங்க் போன்ற வங்கிகளின் தரக்குறியீட்டை விட (சி-) குறைந்து போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எஸ்.பீ.ஐ.யின் தரக்குறியீடு குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, மத்திய அரசு இவ்வங்கியில் கூடுதல் பங்கு மூலதனத்தை அளிக்கும் என தெரிகிறது. அவ்வாறு அளிக்கப்படும் நிலையில், இதன் தரக்குறியீடு மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என, வங்கி துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். "சி-' தரக்குறியீடு என்பது ஒருவங்கிக்கு போதுமான நிதி வலிமை உள்ளது என்பதை குறிக்கிறது. அதேசமயம், "டீ+' என்பது, அவ்வங்யின் நிதி வலிமை மிதமான அளவிலேயே உள்ளது என்பதுடன், வெளியிலிருந்து நிதி ஆதாரம் தேவைப்படும் சாத்தியக் கூறு உள்ளது என்பதையும் குறிக்கிறது.இது தவிர, எஸ்.பீ.ஐ.யின் வசூலாகாத கடன்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற மதிப்பீடும், மூடிஸ்நிறுவனம், அதன் தரக்குறியீட்டை குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|