பதிவு செய்த நாள்
05 அக்2011
09:06
கூப்பர்டினோ: தகவல்தொழில்நுட்பத்துறையில் புதிய புரட்சியாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐ-போன் 4 எஸ் மாடலினை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கனவே ஐபேடினை அறிமுகப்படுத்தி முன்னணியில் உள்ள இந்த நிறுவனம் ஐ-போன்களிலும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த அறிமுகவிழாவில் ஆப்பிள் இன்ங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம்கூக், புதிய ஐ-போனை அறிமுகப்படுத்தி பேசுகையில், ஆப்பிள் நிறுவனம் துவங்கி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவுற்றது. கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் . இன்று சர்வதேச சந்தையில் ஐ-போன் ஹாண்ட்செட் விற்பனையில் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த வகையில்தற்போது அறிமுகமாகியுள்ள ஐ-போன் 4 எஸ், ஹை ரிசலூசன் கேமிரா,விரைவான இணையதளசேவை கொண்டது. மேலும் வரும் 12-ம் தேதி மேலும் 3-ஜி எஸ், ஐ.ஓ.எஸ் உள்ளிட்ட சில மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது . இந்த ஐ-போன் கேட்கும் கேள்விகளுக்க பதில் கூறும் வசதியும் உள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|