பதிவு செய்த நாள்
05 அக்2011
12:07
புதுடில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான (ஓ.என்.ஜி.சி.)யின் தலைவராக நேற்று சுதிர்வாசுதேவன் பொறுப்பேற்றார். இதற்காக ஒப்புதலை இந்தியபிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனராக இருந்த சுதிர்வாசுதேவன், நேற்று தலைவராக பொறுப்பேற்றபின் கூறுகையில், வரும் 2013-ம் ஆண்டில் 28 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். மேலும் கடந்த 49 ஆண்டுகளில் நாடு முழுவதும் 33 ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரம் பேர் ஒய்வு பெறவுள்ளனர். மேலும் உற்பத்தியினை பாதிக்காத வகையில் வருடந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவர் தற்போது மங்களுர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப்பொருட்கள் உற்பத்திய நிறுவனத்தின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|