நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 3 சதவீதம் உயர்வுநடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 3 சதவீதம் உயர்வு ... ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நிறுவனங்களின் கையகப்படுத்தலில் சரிவு நிலை ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நிறுவனங்களின் கையகப்படுத்தலில் சரிவு ... ...
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2011
02:21

மும்பை:விஜயதசமியை முன்னிட்டு, நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 5ம் தேதி நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 72.45 புள்ளிகள் சரிவடைந்து, 15,792.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 20.85புள்ளிகள் குறைந்து, 4,751.30புள்ளிகளிலும் நிலைபெற்றன. நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டுமொத்த அளவில், மிகவும் மோசமாகவே உள்ளது. ஜனவரி முதல் இதுவரையிலுமாக, "சென்செக்ஸ்' 22 சதவீதம் அல்லது 4,716.68 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. ஜனவரி மாதத்தில், "சென்செக்ஸ்' 20,000 புள்ளிகளில் இருந்தது. இது, அக்.,5ம் தேதியன்று, 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவ டைந்து, 15,792.41 புள்ளிகளாக உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள் தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்து, 27 ஆயிரத்து 361 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டுள்ளன.இதே காலத் தில், 25 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 12 ஆயிரத்து 803 கோடியும், உரிமைப் பங்கு வெளியீடுகள் மூலம், 5,519 கோடி ரூபாயும் நிறுவனங்களால் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டது.நேற்று, தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய உலோக சந்தைகள், அன்னியச் செலாவணி, நிதிமற்றும் விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளுக்கும் விடுமுறையாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)