பதிவு செய்த நாள்
07 அக்2011
02:21
மும்பை:விஜயதசமியை முன்னிட்டு, நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 5ம் தேதி நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 72.45 புள்ளிகள் சரிவடைந்து, 15,792.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 20.85புள்ளிகள் குறைந்து, 4,751.30புள்ளிகளிலும் நிலைபெற்றன. நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டுமொத்த அளவில், மிகவும் மோசமாகவே உள்ளது. ஜனவரி முதல் இதுவரையிலுமாக, "சென்செக்ஸ்' 22 சதவீதம் அல்லது 4,716.68 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. ஜனவரி மாதத்தில், "சென்செக்ஸ்' 20,000 புள்ளிகளில் இருந்தது. இது, அக்.,5ம் தேதியன்று, 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவ டைந்து, 15,792.41 புள்ளிகளாக உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள் தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்து, 27 ஆயிரத்து 361 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டுள்ளன.இதே காலத் தில், 25 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 12 ஆயிரத்து 803 கோடியும், உரிமைப் பங்கு வெளியீடுகள் மூலம், 5,519 கோடி ரூபாயும் நிறுவனங்களால் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டது.நேற்று, தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய உலோக சந்தைகள், அன்னியச் செலாவணி, நிதிமற்றும் விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளுக்கும் விடுமுறையாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|