பங்குச் சந்தைகளுக்கு விடுமுறைபங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ... ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 363 புள்ளிகள் சென்றது ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 363 புள்ளிகள் சென்றது ...
ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நிறுவனங்களின் கையகப்படுத்தலில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2011
02:23

புதுடில்லி:நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், மூன்றாவது காலாண்டில் (ஜூலை -செப்டம்பர்), இந்திய நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் 56சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.இது குறித்து கிரான்ட் தர்மன் என்றசர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பாண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அது போன்று, பல நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன. இத்தகைய இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் மொத்த மதிப்பு 591 கோடி டாலராக (28 ஆயிரத்து 368 கோடி ரூபாய்) உள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 56.25சதவீதம் குறைவாகும். அதேசமயம், இந்திய நிறுவனங்கள், அயல் நாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நடப்பாண்டின் முதல் அரையாண்டு காலத்தை விட, மூன்றாவது காலண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட மொத்த ஒப்பந்தங்களில், அயல்நாட்டு நிறுவனங்களுட னான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 488 கோடி டாலர் (23 ஆயிரத்து 424 கோடி ரூபாய்)என்ற அளவில் உள்ளது. இது, ஒட்டு மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பில் 80சதவீதமாகும். அதேசமயம், இதே காலத்தில், இந்திய நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தின் மதிப்பு 103 கோடி டாலராகும்(4,944 கோடி ரூபாய்).இத்தகைய போக்கு, சென்ற ஆண்டிற்கு நேர் எதிர்மாறாக உள்ளது. சென்ற 2010ம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்திய நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொண்ட கூட்டு ஒப்பந்தம்மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தம் ஆகியவற்றின் மதிப்பு 1,169 கோடி டாலர் (56 ஆயிரத்து 112 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்திருந்தது. அதேசமயம், இதே காலத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களை இணைத்துக் கொள்வது மற்றும் கையகப்படுத்துவது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மதிப்பு 182 கோடி டாலர் (8,736 கோடி ரூபாய்) என்ற அளவிற்கு இருந்தது.நடப்பு காலண்டர் ஆண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில்,இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களோடு மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளன. அதேசமயம், இந்திய நிறுவனங்கள்,உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, கையகப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் குறைந்துள்ளன.மதிப்பீட்டு காலத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றுள், மதிப்பின் அடிப்படையில், ”ரங்கத் துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது.இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில், இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட மிகப் பெரிய மதிப்பிலான இரு ஒப்பந்தங்கள் அடங்கும். அதிக மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டதில், தொலைத் தொடர்புத் துறை இரண்டாவது இடத்தைப் பிடித் துள்ளது. அடுத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை, மிகப் பெரிய மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டு மூன்றா வது இடத்தைப் பிடித்துள்ளது.ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலத்தில், இந்திய நிறுவனங்கள், 488 கோடி டாலர் (23 ஆயிரத்து 424 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, அன்னிய நிறுவனங்களுடன் இணைந்து செயல் படுவது மற்றும் கையகப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதில், அயல்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட 29 ஒப்பந்தங்களின் மதிப்பு 369 கோடி டாலராகும் (17 ஆயிரத்து 712 கோடி ரூபாய்). இது, மதிப்பின் அடிப்படையில், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஆண்டு, இதே காலத்தில், அயல்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்கள் 63 லட்சம் டாலர் (3,024 கோடி ரூபாய்) மதிப்பிலான 39 ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தன. மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிறுவனங்கள் அல்லது அவற்றின் துணை நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், கையகப்படுத்துவது தொடர்பாகவும் 119 கோடி டாலர் மதிப்பிலான (5,712 கோடி ரூபாய்)34 ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக நிறுவனத்தை தொடங்குவதை விட, ஒரு துறையில் ஏற்கெனவே செயல்படும் நிறுவனத்தை இணைத்துக் கொள்வது அல்லது கையகப்படுத்துவதன் வாயிலாக இத்துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதுடன், நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள், சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன.இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)