பதிவு செய்த நாள்
07 அக்2011
10:21
மும்பை: முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக 1000 சி.சி. திறன் கொண்ட மோட்டார் பைக்கினை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மன் நாட்டில் சொகுசு ரக கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக பி.எம்.டபிள்.யூ. கார் நிறுவனம் உள்ளது. இந்தியாவில் பெருகி வரும் இருசக்கர வானத்திற்கு போட்டியாக பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் 1000 சி.சி. சூப்பர் பைக்கினை அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தைகளில் அறிமுகமாக உள்ளதாக , அந்நிறுவனத்தின் , இந்திய பிரிவின், நவனீத் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷரத்கச்சாலியா , கூறினார். இதன் என்ஜின் பாகங்கள் மற்றும் இதர உதிரிபாகங்கள் அனைத்தும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதியாகிறது. பல்வேறு மாடல்களில் வரவுள்ள இந்த சூப்பர் பைக்கின் விலை குறைந்தபட்சம் ரூ. 18 லட்சம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|